பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து பேசிய விவகாரம் : நெல்லை கண்ணன் வீட்டை பாஜகவினர் முற்றுகை

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து பேசிய விவகாரத்தை கண்டித்து, நெல்லை கண்ணன் இல்லத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-31 07:15 GMT
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து பேசிய விவகாரத்தை கண்டித்து,  நெல்லை கண்ணன் இல்லத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை கண்ணன் மீது பிணையில் வெளிவர முடியாத படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவரை கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதனிடையே, நெல்லை கண்ணனை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக, போலீசார் தெரிவித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்