"பள்ளிகளை சுத்தப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு - அரையாண்டு விடுமுறை முடிவதற்குள் செய்ய உத்தரவு"

கட்டடங்களை சீர்படுத்தி, கழிவறைகளை தூய்மைப்படுத்த உத்தரவு

Update: 2019-12-19 23:50 GMT
பள்ளி வளாகங்களில்  தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றி, கட்டடங்களை சீர்படுத்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளி மைதானங்களில் புதர் மண்டியிருந்தால் அவற்றை அகற்றவதோடு, பழுதடைந்த மின்சாதன பொருட்களை ஒழுங்குபடுத்தவும், கழிப்பறைகளை  தூய்மைபடுத்தி, பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரையாண்டு தேர்வு முடிந்து, பள்ளி துவங்குவதற்குள், தூய்மை பணிகளை  மேற்கொண்டு, பள்ளிகளை தயார் நிலையில் வைக்க தலைமை ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்