சென்னை: கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 22 பேர் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-12-18 08:20 GMT
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 22 பேர் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பல்கலைக்கழகத்திற்கு
வரும் 23ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் வளாகத்தில் அமர்ந்தவாறு, கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் 600 பேர் நான்காவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்