அமைச்சர் பாண்டியராஜன் மீது வழக்கு : விசாரணைக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய கொடியை அவமதித்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Update: 2019-12-18 02:32 GMT
தேசிய கொடியை அவமதித்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆர்.கே. நகர்  தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசியகொடியை அவமதித்ததாக தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில்,  அமைச்சர் மாஃபாபாண்டியராஜன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக  சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணைக்கு  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்