"பெண்கள் பாதுகாப்புக்கு உதவும் காவலன் செயலி"
சென்னை மாநகர போலீசார், பெண்கள் பாதுகாப்புக்கு என "காவலன்" என்கிற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
சென்னை மாநகர போலீசார், பெண்கள் பாதுகாப்புக்கு என, "காவலன்" என்கிற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த செயலி மூலம் இக்கட்டான சூழ்நிலைகளில் பெற்றோர் மற்றும் காவல்துறைக்கு எளிதில் தகவல் அளிக்கலாம். பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், இந்த செயலியை பெண்கள் அதிகமாக பயன்படுத்துவதற்காக, சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் விழிப்புணர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வரும் பெண்களுக்கு காவலன் செயலி குறித்து விளக்கி அதை பயன்படுத்த வலியுறுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.