காலதாமதமாக வந்த சத்துணவு அமைப்பாளர் : உணவின்றி மாணவர்கள் தவிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லூர் பகுதியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர் கஸ்தூரி கால தாமதமாக வந்ததால் மதியம் உணவின்றி மாணவர்கள் பசியில் தவித்துள்ளனர்.

Update: 2019-12-08 03:35 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லூர் பகுதியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர் கஸ்தூரி கால தாமதமாக வந்ததால் மதியம் உணவின்றி மாணவர்கள் பசியில் தவித்துள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்த நிலையில், தமக்கு பள்ளிக்கூடம் செயல்படுவது தெரியாது என்று கஸ்தூரி விளக்கமளித்துள்ளார். இந்நிலையில், சுகாதாரமற்ற முறையில் சத்துணவு வழங்கப்படுவதாகவும்  உணவு வழங்குவதில் எப்போது காலதாமதம் ஏற்படுவதாகவும்  மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்