திருமங்கலம் : திருட்டு மணல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மணல் லாரி மோதி இளைஞர் உயிரிழந்தார்.

Update: 2019-12-05 09:33 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மணல் லாரி மோதி இளைஞர் உயிரிழந்தார். திருமங்கலம் அருகே பெருமாள் கோவில் பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் அதிகாலை பணிக்கு சென்ற போது எதிரே திருட்டு மணல் ஏற்றி வந்த லாரி மோதி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டி வந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்