உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு

உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலமேகம், முகமது ரஃஸ்வி ஆகிய வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்தனர்.

Update: 2019-12-04 09:49 GMT
உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலமேகம், முகமது ரஃஸ்வி ஆகிய வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்தனர். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கை மீண்டும் பட்டியலில் இட வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது. மேலும், மறைமுக தேர்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மறைமுக தேர்தல் தேதி அறிவித்துள்ளதாக முறையீட்டில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு வழக்கு குறித்த ஆவணங்களை படித்த பின், பட்டியலில் இடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்