புதிய பணத்தாள் வேண்டும் என கேட்டு மாயாஜாலம் - ரூ. 26,000 மோசடி செய்து தப்பிய மலேசிய நாட்டினர்
வள்ளியூர் அருகே காவல்கிணறு பஜாரில் உள்ள உரக்கடை ஒன்றில் பூச்சி மருந்து வாங்க வந்தவர் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் 13-ஐ லாவகமாக திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.;
வள்ளியூர் அருகே காவல்கிணறு பஜாரில் உள்ள உரக்கடை ஒன்றில் பூச்சி மருந்து வாங்க வந்தவர் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் 13-ஐ லாவகமாக திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கடைக்கு வந்த இருவர் தாங்கள் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் பல்வேறு நாட்டின் பண தாள்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளனர். பின்னர் பணப்பெட்டியில் இருந்த பணத்தை வாங்கி அதனை முன்னும் பின்னும் மாற்றி மேஜிக் போல் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்த நிலையில் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் 13 குறைந்தது தெரியவந்தது. அங்கிருந்த சிசிடிவியில் பார்த்தபோது மலேசிய நபர்கள் திருடியது தெரியவந்தது.