தமிழக தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார் ராஜகோபால் ஐஏஎஸ்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக தலைமை தகவல் ஆணையர் ராஜகோபாலுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Update: 2019-11-21 06:50 GMT
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக தலைமை தகவல் ஆணையர் ராஜகோபாலுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகோபால் 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்