ஐஐடி முன்பு திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்...

கேரள மாணவி பாத்திமாவின் தற்கொலை சம்பவத்தை கண்டித்து, சென்னை ஐஐடி வளாகம் முன்பு திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-11-15 11:07 GMT
கேரள மாணவி பாத்திமாவின் தற்கொலை சம்பவத்தை கண்டித்து, சென்னை ஐஐடி வளாகம் முன்பு திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்



சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது கொலை வழக்கு பதிவு  செய்யக்கோரி அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.ஐ.டி நிறுவன வாயிலை அவர்கள் முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினர்.  இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், மாணவர் அமைப்பினரை கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்