நகை வாங்குவது போல் நடித்து திருட்டு : வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது

சென்னையில் நகை வாங்குவது போல் நடித்து, 5 சவரன் நகையை திருடிச் சென்ற வடமாநில இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-07 10:17 GMT
சென்னையில் நகை வாங்குவது போல் நடித்து, 5 சவரன் நகையை திருடிச் சென்ற வடமாநில இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அண்ணாநகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார், கணேஷ் சோனிசா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்