ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட தகராறு : வழக்கறிஞரை போலீசார் தாக்கிய சம்பவம்

ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை போலீசார் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், போலீசார் ஆயிரத்து ஒரு ரூபாய் அபராதமும், மன்னிப்பு கடித‌மும் வழங்கிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

Update: 2019-10-31 13:55 GMT
ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை போலீசார் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், போலீசார் ஆயிரத்து ஒரு ரூபாய் அபராதமும், மன்னிப்பு கடித‌மும் வழங்கிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக உள்ள நெல்லையைச் சேர்ந்த வேலுச்சாமி தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். கடந்த 25ஆம் தேதி இவர் தனது மகளை மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதில் வழக்கறிஞர் வேலுச்சாமிக்கும் காவல்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்