"டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

பண்டிகை காலமாக இருந்தாலும் தொய்வு இன்றி விடுமுறையில்லாமல் டெங்கு காயச்சல் ஒழிப்பு நடவடிக்கையில் முழுமையாக ஈடுபடுவோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-23 19:49 GMT
பண்டிகை காலமாக இருந்தாலும் தொய்வு இன்றி   விடுமுறையில்லாமல்  டெங்கு காயச்சல் ஒழிப்பு நடவடிக்கையில் முழுமையாக ஈடுபடுவோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில்  டெங்கு தடுப்பு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் பல அரசு அலுவலகங்களே ஒத்துழைப்பு வழங்கவில்லை என துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்