நாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை

நாங்குநேரி இடைத்தேர்தலை நடத்த தடை இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Update: 2019-10-18 10:05 GMT
சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் தொடர்ந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், தேர்தலை நேர்மையாக நடத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், இது வரை 19 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இரு தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, தேர்தல் அறிவித்த பின் தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தனர். தேர்தலின் போது ஏற்படும் அசாதாரண விஷயங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தால் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றுக் கூறி சுயேட்சை வேட்பாளரின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்