மக்களை அச்சுறுத்திய நிர்வாண திருடன் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிர்வாண திருடனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-10-17 04:41 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிர்வாண திருடனை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடன் ஒருவன் நிர்வானமாக ஓடிய சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் வி.என்.ஆர் நகரை சேர்ந்த  கார் ஓட்டுனர் செந்தில் குமார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்