அப்துல் கலாம் பிறந்தநாளில் அறிவியல் கண்காட்சி நடத்த வேண்டும் - அரசு பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி வரும் 14, 15ஆம் தேதிகளில் அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்த பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-10-12 12:58 GMT
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி வரும் 14 , 15ஆம் தேதிகளில் அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்த பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவியல் கண்காட்சிகளில் சிறப்பான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, கரூரில் வரும் அக்டோபர் 31, நவம்பர் 1 , 2ஆம் தேதிகளில் நடக்கும் மாநில அளவிலான கண்காட்சியில் , பரிசுகள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்