திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது : விழிப்புணர்வு பாடலை பாடி அசத்தி வரும் மூதாட்டி

சிதம்பரம் அருகே திறந்தவெளியில் மலம் கழிக்கக்கூடாது என விழிப்புணர்வு பாடலை பாடி மூதாட்டி ஒருவர் அசத்தி வருகிறார்.

Update: 2019-10-07 09:33 GMT
சிதம்பரம் அருகே திறந்தவெளியில் மலம் கழிக்கக்கூடாது என விழிப்புணர்வு பாடலை பாடி மூதாட்டி ஒருவர் அசத்தி வருகிறார். பொன்னங்கோயில் கிராமத்தை சேர்ந்த எழுதப்படிக்க தெரியாத விவசாய கூலி வேலை செய்து வருபவர் நீலாவதி. 60 வயதை கடந்த இவர், திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது என்றும், அப்படி திறந்த வெளியில் அமர்வதால் விஷ ஜந்துக்கள் கடித்து உயிர் போகும் நிலை உருவாகும் என்றும் கூறி, அதை பாடலாக பாடி வருகிறார். இந்நிலையில் அந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக வேகமாக பரவி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்