தொடர் மழையால் வைகை அணையின் நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் முதன்முறையாக 60 அடியை எட்டியது.
தேனி மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, வைகை அணையின் நீர்மட்டம், நடப்பு ஆண்டில் முதன்முறையாக 60 அடியை எட்டியது. மேலும், மழை தொடர்வதால், அணைக்கு அதிகளவு தண்ணீர் வந்துகொண்டுள்ளது. இதனால், வைகை அணை இந்த ஆண்டு முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.