நடிகர் தனுஷ் போலி சான்றிதழ் சமர்ப்பித்ததாக தொடரப்பட்ட வழக்கு - நவம்பர் 11ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

நடிகர் தனுஷ் தனது மகன் என்று மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கில் தனுஷ் தரப்பில் போலியான சான்றிதழ் சமர்பிக்கப்பட்டதாக கதிரேசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

Update: 2019-10-02 03:31 GMT
நடிகர் தனுஷ் தனது மகன் என்று மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கில், தனுஷ் தரப்பில் போலியான சான்றிதழ் சமர்பிக்கப்பட்டதாக கதிரேசன் தரப்பில்  வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு, மதுரை 6வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், பிறப்பு சான்றிதழை சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கதிரேசன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முத்துராமன், வழக்கை நவம்பர் 11ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்