மணல் சரிந்து விழுந்ததில் தந்தை - மகன் உயிரிழப்பு : போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடல்கள் அடக்கம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வைப்பாற்றில் முறைகேடாக மணல் அள்ளியபோது, மணல் சரிந்து விழுந்ததில் தந்தை,மகன் உயிரிழந்தனர்.

Update: 2019-09-21 02:35 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வைப்பாற்றில் முறைகேடாக மணல் அள்ளியபோது, மணல் சரிந்து விழுந்ததில் தந்தை,மகன் உயிரிழந்தனர். கோட்டைபட்டி வைப்பாற்றில், விஜயகரிசல்குளத்தை சேர்ந்த பிள்ளையார் மற்றும் அவரது மகன் மாரியப்பன் ஆகியோர் முறைகேடாக மாட்டுவண்டியில் மணல் அள்ளியுள்ளனர்​. அப்போது எதிர்பாராத விதமாக மணல் சரிந்து விழுந்ததில், இருவரும் மணலில் புதைந்தனர். உடனிருந்தவர்கள் அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்