"நீட் தேர்வு ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல" - அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததற்கு, தமிழக அரசு காரணமல்ல என நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-20 12:05 GMT
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததற்கு, தமிழக அரசு காரணமல்ல என நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கண்காட்சியை துவங்கி வைத்த அவர், ஆள்மாறாட்டம் குறித்து, நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் என்றார். இருப்பினும், மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறிய அவர், நீட் எதிர்ப்பு மனப்பான்மையுடன் தாம் இருப்பதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்