10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-15 18:59 GMT
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிங்கராஜபுரத்தில் விவசாயம் செய்து வரும் கோட்டைசாமி என்பவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்தனர். அதன் அடிப்படையில், கோட்டை சாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்