"இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம்" - உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-14 09:01 GMT
இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரங்களில் பேனர்கள் வைக்கப்படவில்லை என்று கூறினார். தி.மு.கவில் புதிதாக 30 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதே இலக்கு என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக, ஒரு சிலருக்கு உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து உதயநிதி உதவி செய்தார். 
Tags:    

மேலும் செய்திகள்