"மண்ணை மலடாக்கி விட்டோம்" - ஜக்கி வாசுதேவ் வேதனை

ரசாயன உரங்களை பயன்படுத்தி, மண்ணை மலடாக்கி விட்டோம் என்று ஈஷோ யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-14 02:12 GMT
ரசாயன உரங்களை பயன்படுத்தி, மண்ணை மலடாக்கி விட்டோம் என்று ஈஷோ யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். தஞ்சையில்  காவிரி கூக்குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், காவிரியில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், பிரச்சினை என்பது நமக்குள் தான் இருக்கிறது என்று கூறினார். ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு நாட்டில் என்னென்ன வளம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம் என்றார். எனவே, இதை செய்யக் கூடாது என கூறக் கூடாது என்று கருத்து தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்