ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் ராஜினாமாவை வாபஸ் பெற வேண்டும் : சொந்தஊர் மக்கள், உறவினர்கள் வேண்டுகோள்

ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என அவரின் சொந்தஊரான மாத்தூர் கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2019-09-10 09:59 GMT
ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என அவரின் சொந்தஊரான மாத்தூர் கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுராந்தகம் அருகில் உள்ள மாத்தூர் கிராமத்தில், அறிவுசார் புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை அமைத்ததோடு, ஏராளமான மாணவர்கள் கல்வி பெற சசிகாந்த் உதவி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். சசிகாந்த் செந்திலின் ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்றும் அவர் மீண்டும் பொதுசேவை செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் மாத்தூர் கிராமமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்