மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.

Update: 2019-09-10 09:47 GMT
மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது. படகை சிறைபிடிப்பதற்காக சிறிது நேரம் இலங்கை கடற்படையினர் துரத்தி வந்துள்ளனர். அச்சம் அடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள்  வலைகளை கடலில் அறுத்துவிட்டு, அவசர அவசரமாக கரை திரும்பியுள்ளனர். இதனால் படகு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே, ஏற்கனவே கைதான புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர், விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்