இளைஞர்களிடம் நேர்காணல் நடத்திய உதயநிதி : விண்ணப்ப படிவம் - ஜாதியை புறந்தள்ளிய திமுக

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், நேர்காணல் நடத்தினார்.

Update: 2019-09-08 08:32 GMT
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், நேர்காணல் நடத்தினார். சேலம் கிழக்கு, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்றனர். நேர்காணலுக்கு வந்த இளைஞர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட உதயநிதி, அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். இளைஞரணி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான இந்த விண்ணப்ப படிவத்தில், ஜாதி குறித்து கேட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்