தெலங்கானா ஆளுநராக தமிழிசை பதவியேற்பு

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்று கொண்டார்.

Update: 2019-09-08 07:57 GMT
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த வாரம் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். இதையடுத்து ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தெலங்கானா மாநில பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்று கொண்டார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா சிங் சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநராக பதவியேற்று கொண்ட தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் மேடையை விட்டு கீழே சென்ற தமிழிசை சவுந்தராஜன், தமது தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். இவ்விழாவில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தெலங்கானா மாநில உயர் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்