கீழடி அகழாய்வுக்கு கூடுதல் நிதி வேண்டும் - ஜி.கே.வாசன்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

Update: 2019-09-04 20:28 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு கூடுதல் அவகாசம் அளித்து நிதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தமிழக மக்களுக்கு, மத்திய அரசு பருப்பு, பாமாயில் மானியத்தை நிறுத்தியுள்ளதாகவும் அதனை மீண்டும் வழங்க வேண்டும் என, அவர் வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்