சென்னை : மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள அண்ணா பூங்காவில், மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-01 09:45 GMT
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள அண்ணா பூங்காவில், மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம், மழைநீர் சேமிப்பு குறித்த துண்டு அறிக்கை அளித்த மாணவர்கள், குடிநீரின் அவசியத்தையும், மழை நீரின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் விதமான வாக்கியங்களை கூறினர். தொடர்ந்து கோடம்பாக்கம் பகுதி முழுவதும் மாணவர்கள் இப்பேரணியில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்