கும்பகோணம் அரசு கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி : மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கும்பகோணம் அரசு கல்லூரி மாணவி விஷம் அருந்திய சம்பவம் தொடர்பாக பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-30 03:48 GMT
கும்பகோணம் அரசு கல்லூரி மாணவி விஷம் அருந்திய சம்பவம் தொடர்பாக பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பயிலும் எம்.பில் மாணவியின் செய்முறை பயிற்சி பாட நோட்டில் பேராசிரியர் ஒருவர் கையெழுத்திட காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவி, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்