"கல்வி கட்டணம் உயர்த்த வாய்ப்பில்லை" - அண்ணா பல்கலை. துணை வேந்தர் உறுதி

அண்ணா பல்கலைகழகத்தில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என அதன் துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-29 03:39 GMT
அண்ணா பல்கலைகழகத்தில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என அதன் துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழக்தின் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு இனிமேல் நிகழாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். அண்ணா பல்கலை கழகத்தின் படிப்பிற்கான கல்வி கட்டணம் இந்தாண்டு உயர்த்தப்பட வாய்ப்பில்லை என கூறிய அவர் , கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில் நுட்ப கல்லூரி, எம்ஐடி மற்றும் அதன் 13 உறுப்பு கல்லூரிகளில் இந்தாண்டு கல்வி கட்டணம் உயராது என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்