வைகை, பெரியார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

வைகை அணையில் இருந்து, பெரியார் பிரதான கால்வாய் பகுதி பாசனத்திற்கான நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-08-27 09:17 GMT
வைகை அணையில் இருந்து, பெரியார் பிரதான கால்வாய் பகுதி பாசனத்திற்கான நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதேபோல், கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதி பாசனத்திற்காக, பெரியார் அணையில் இருந்து நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு நீர் திறந்துவிடவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதன்மூலம், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்