உறவினர் வீட்டில் கொள்ளையடித்த இளைஞர் - கொள்ளையடிக்க உடந்தையாக இருந்த நண்பர்கள் 3 பேரை கைது

உறவினர் வீட்டில் கொள்ளையடித்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-23 02:49 GMT
உறவினர் வீட்டில் கொள்ளையடித்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.  நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலை சேர்ந்த மீனவர் இளையராஜா வீட்டிலிருந்து கடந்த 5 ஆம் தேதி,  56 சவரன் தங்க நகைகள், 96 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டன. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து வந்த நிலையில், கொள்ளையில் ஈடுபட்டதாக, இளையராஜாவின் உறவினர் பிரதீப் என்கிற இளைஞரை கைது செய்தனர். கொள்ளையடிக்க உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் குற்றாலீஸ்வரன், முத்தையன் ஆகியோரைக் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து கொள்ளைபோன பொருட்களையும் மீட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்