கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்
கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்களின் சீசன், கடந்த பிப்ரவரியுடன் முடிவடைந்தது.
கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்களின் சீசன், கடந்த பிப்ரவரியுடன் முடிவடைந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அங்குள்ள பிரையன்ட் பூங்கா பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட செடிகளில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.