அத்திவரதரை தரிசிக்க வந்த முதியவர் மாயம் - தகவல் தந்தால் ரூ.1லட்சம் பரிசு

70 வயதான சுப்புராயலு என்பவர், தனது குடும்பத்தினருடன் கடந்த 8ஆம் தேதி அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி மாயமாகி விட்டார்.

Update: 2019-08-16 13:50 GMT
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த 70 வயதான சுப்புராயலு என்பவர், தனது குடும்பத்தினருடன் கடந்த 8ஆம் தேதி அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி மாயமாகி விட்டார்.அவரை கண்டுபிடித்து தருமாறு, காஞ்சி போலீசில்,சுப்புராயலு குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர். இதனிடையே, சுப்புராயலு குறித்த தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை வழங்குவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்