கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல துணிக்கடையில் செல்போன் திருடிய இளம்பெண் - போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளரிடம் இளம்பெண் ஒருவர் செல்போனை திருடிச் சென்றுள்ள சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Update: 2019-08-04 05:04 GMT
கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளரிடம் இளம்பெண் ஒருவர் செல்போனை திருடிச் சென்றுள்ள சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக செல்போன் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் துணிக்கடைக்கு சென்று சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், டிப்டாப்பாக உடையணிந்த இளம்பெண் ஒருவர், ஸ்ரீனிவாசன் அயர்ந்த நேரத்தில் செல்போனை லாவகமாக திருடிச் சென்றார். 
Tags:    

மேலும் செய்திகள்