தமிழ் - அறிவியல் கருத்தரங்கு - நாளை தொடக்கம்...

அறிவியல் தொடர்பான செய்திகள் மற்றும் ஆய்வு கட்டுரைகளை தமிழ் மொழியில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ் அறிவியல் என்ற கருத்தரங்கு சென்னையில் நாளை தொடங்குகிறது.

Update: 2019-08-02 10:55 GMT
அறிவியல் தொடர்பான செய்திகள் மற்றும் ஆய்வு கட்டுரைகளை தமிழ் மொழியில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ் அறிவியல் என்ற கருத்தரங்கு சென்னையில் நாளை தொடங்குகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஞ்ஞான் பிரசார் பிரிவின் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்,  அறிவியல் பலகை என்ற அமைப்பு சார்பில் நாளை முதல் இரு நாட்களுக்கு கருத்தரங்கு நடைபெறுவதாக கூறினார். அறிவியலை தமிழ் மொழியில் மாணவர்கள் மத்தியில்  கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்