சென்னை கள்ள நோட்டை கொடுத்து மீன் வாங்கியவர் கைது
சென்னை காசிமேட்டில் கள்ள நோட்டு கொடுத்து மீன் ஏலம் எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காசிமேட்டில் கள்ள நோட்டு கொடுத்து மீன் ஏலம் எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் துறைமுகத்தில் தேசப்பன் என்ற மீனவரிடம் இரண்டு கூடை பாறை மீனை நான்காயிரத்து 500 ரூபாய் பணத்தை கொடுத்து ஏலம் எடுத்த போது, அதில் ஏழு 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்ததில், அவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி என்பதும் அவரிடம் 17 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருப்பதும் தெரியவந்ததுள்ளது.