அடிப்படை வசதிகள் இல்லை... சைதாப்பேட்டை அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி சென்னை சைதாப்பேட்டையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-02 05:58 GMT
அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி சென்னை சைதாப்பேட்டையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் தரமான உணவு, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து அங்கு வந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல வாரிய அதிகாரி ரவி மற்றும் காவல்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேவைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்