"கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்படும்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கேபிள் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-08-01 13:42 GMT
அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கேபிள் நிறுவனங்கள்  உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெல்லூர்பேட்டை பகுதியில் நடந்து சென்று அவர் வாக்கு சேகரித்தார். பின்னர் செ​ய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, நாட்டிலேயே தமிழகத்தில் தான் அரசு சார்பில், கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டு,  அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்