உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது ஜனநாயக குற்றம் - ஈஸ்வரன்

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது ஜனநாயக குற்றம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-31 09:23 GMT
உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது, ஜனநாயக குற்றம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்தலாக் உள்ளிட்ட விவகாரங்களில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை அரசு கேட்க வேண்டும் என்றார். விவசாயிகளின் பிரச்சினைகளை களைய, அவர்களோடு துணை நிற்போம் என்ற ஈஸ்வரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததே, பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் என்று குற்றம்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்