பல்வேறு ஊழல்கள் செய்துள்ள திமுகவினரிடம் மட்டுமே அதிக பணம் இருக்கும் - நிலோபர் கபில்
ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பஷிராபாத், கரிமாபாத், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் நிலோபர் கபில் வாக்குசேகரித்தார்.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பஷிராபாத், கரிமாபாத், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் நிலோபர் கபில் வாக்குசேகரித்தார். இஸ்லாமிய சமுதாய மக்கள் வாழும் அந்தப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவினரிடம் கட்டுக்கட்டாக பணம் இல்லை என்றார் .பல்வேறு ஊழல்கள் செய்துள்ள திமுகவினரிடம் மட்டுமே அதிக பணம் இருக்கும் என்றும் அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.