காசிமேடு பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலம் : ஆர்வமுடன் பார்வையிட்டு வரும் பொதுமக்கள்

சென்னை காசிமேடு கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Update: 2019-07-27 06:20 GMT
சென்னை காசிமேடு கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.  கோவளம் கடல் பகுதியில் மீனவர் அருண்,  வலையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று சிக்கியுள்ளது.  2 டன் எடையுள்ள அந்த திமிங்கலத்தை காசிமேடு பகுதிக்கு கொண்டு வந்த மீனவர்கள், அதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். திமிங்கலத்தின் முகத்தில் ரத்தக்காயம் காணப்படுவதால், அது கப்பலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். காசிமேடு கடற்கரையில் உள்ள திமிங்கலத்தை, அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்