சிறைத்துறை காவலர்கள் தம்மை துன்புறுத்தியதாக முகிலன் புகார்
மக்களுக்காக போராடக்கூடியவர்கள் மீது அரசு அடக்குமுறை செலுத்துவதாக சமூக ஆர்வலர் முகிலன் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களுக்காக போராடக்கூடியவர்கள் மீது அரசு அடக்குமுறை செலுத்துவதாக சமூக ஆர்வலர் முகிலன் குற்றம் சாட்டியுள்ளார். கரூர் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட போது, தம்மை சிறைத்துறை காவலர்கள் முதுகில் அடித்து துன்புறுத்தியதாக முகிலன் சார்பில் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை தொடர்பாக மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி முகிலன் நீண்ட நேரம் விளக்கமளித்தார்.