ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு : அரசுக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி, தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-23 07:28 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி, தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, இன்று காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக சரபோஜி அரசுக்கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  

Tags:    

மேலும் செய்திகள்