"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது?" - கனிமொழி கேள்வி

தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-07-21 08:29 GMT
தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லா திட்டத்திற்கும் இந்தியில் பெயர்வைக்கும் மத்திய அரசு எப்படி தமிழை வளர்க்க நினைக்கும் என்றும் கேள்வி எழுப்பினார். அதேபோல, தொழில்வளர்ச்சிக்கு தனியாக பகுதி உள்ளதை போல, விவசாயத்திற்கும் தனிப்பகுதி ஒதுக்கி தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 
Tags:    

மேலும் செய்திகள்