இறுதி செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு தந்தை - மகன் தற்கொலை

இறுதி செலவுக்கு மகளிடம் பணம் கொடுத்துவிட்டு தந்தை - மகன் தற்கொலை செய்துகொண்டனர்.

Update: 2019-07-15 21:19 GMT
திருப்பூர் மாவட்டம்,பல்லடத்தை அடுத்த சின்னகாளிபாளையத்தில் வசித்து வரும் துரைராஜ், மனைவியை இழந்த நிலையில், மகன் கோபால கிருஷ்ணனுடன் வசித்து வந்தார்.கடந்தாண்டு இவரது மகள் செல்வியின் மகன் ரகுநாதன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால், குடும்பமே சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செல்வியை சந்தித்து, செலவுக்கு தேவைப்படும் என கூறி, 30 ஆயிரம்  ரூபாய் கொடுத்துவிட்டு கோபாலகிருஷ்ணனும், துரைராஜ்-ம் தற்கொலை செய்து கொண்டனர்.இறுதிச் செலவுக்கு மகளிடம் பணம் கொடுத்து விட்டு தந்தை - மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்