ஹஜ் யாத்திரை செல்லும் முதல் குழு பயணம் : திருச்சியிலிருந்து 94 பேர் புறப்பட்டு சென்றனர்

ஹஜ் யாத்திரை செல்லும் முதல் குழுவினர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டு சென்றனர்.

Update: 2019-07-14 08:37 GMT
ஹஜ் யாத்திரை செல்லும் முதல் குழுவினர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டு சென்றனர். 20 பெண்கள் உள்ளிட்ட 94 பேர் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் இலங்கை சென்று  பின்பு அங்கிருந்து சவுதி அரேபியா செல்கின்றனர். அவர்களை உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர். இஸ்லாமியர்களின் புனித கடமையாக கருதப்படும் ஹஜ் பயணத்தை மேற்கொள்பவர்களுக்காக இந்த ஆண்டு நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்